கவிஞர் வைரமுத்து
மருத்துவமனையில் அனுமதி
மேட்டுப்பாளையம் ரோட்டில் சாயிபாபாகாலனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கவிஞர் வைரமுத்து சிகிச்சைக்காக
சேர்க்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.
கோவையில்
கடந்த சில
தினங்களுக்கு முன் கவிஞர்கள் திருவிழா
என்ற நிகழ்ச்சி
நடந்தது. இதில்
திரைப்பட பாடலாசிரியர் கவிஞர்
வைரமுத்து பங்கேற்றார்.
அதன்பின், திருப்பூரில்
நடந்த
நிகழ்ச்சியிலும் பங்கேற்ற கவிஞர்
வைரமுத்து, நேற்று முன்தினம் கோவையில்
உள்ள ஒரு
லயன்ஸ் கிளப்
சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில்
பங்கேற்பதற்காக கோவைசென்றார். கோவை சென்ற வைரமுத்துவுக்கு லேசான
முதுகுவலி ஏற்பட்டது.
இதையடுத்து
வைரமுத்து நேற்று
முன்தினம் மாலை
மேட்டுப்பாளையம் ரோட்டில்
சாயிபாபாகாலனியில் உள்ள ஒரு
தனியார்
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்த மருத்துவக்குழுவினர்
வைரமுத்துவுக்கு பரிசோதனை செய்தனர். வைரமுத்துவுக்கு
டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்
எனத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.