காத்தான்குடியில் பெண்களும்
சிறுவர்களும் ஆர்ப்பாட்டம்!
மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு எதிரான அடக்கு முறை மற்றும் படுகொலைகளை கண்டித்து காத்தான்குடியில் இன்று பெண்களும் சிறுவர்களும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
காத்தான்குடி பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை மற்றும் படுகொலைகளை கண்டிப்பதாகவும் இதனை உடனடியாக நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இதில் தலையிடுமாறும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் இலங்கை அரசாங்கம் மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஜனாதிபதிக்கு மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.