தனது 66ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது குடும்பத்தாருடன் இணைந்து சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

இதன்படி, வெலிகந்த விவசாய, பொருளாதார மத்திய நிலையத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தானம் வழங்கி வைத்துள்ளார்.

450 க்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் கலந்து கொண்டதுடன், அவர்களுக்கான போசாக்கு மிக்க உணவு பொதிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

நிகழ்வில் பங்குபற்றிய மக்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட சில பிரச்சினைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தினார்.

மேலும், இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் பாரியார் மற்றும் அவரது மகன் தஹாம் சிறிசேன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இது தொடர்பிலான புகைப்படங்களையும், தனது தந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டங்களையும் தஹாம் சிறிசேன தனது முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top