மஹிந்த, நாமல் முகங்கள் பொறித்த
68000 கடிகாரங்கள்
மீட்பு
சப்புகஸ்கந்த
பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
மாபிம பிரதேசத்தில்
உள்ள துறைமுக
களஞ்சியசாலை ஒன்றிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ மற்றும்
அவருடைய புதல்வரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ ஆகியோரின்
உருப்படங்கள் பொறிக்கப்பட்ட 68 ஆயிரம் சுவர் கடிகாரங்களும்
ஜனாதிபதித் தேர்தலுக்காக அச்சிடப்பட்டிருந்த
ஒருதொகை போஸ்டர்களும்
கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மஹர நீதவான்
நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட சோதனை விறாந்தின் அடிப்படையிலேயே
அந்த களஞ்சியசாலை,
சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
குறித்த களஞ்சியசாலையானது
துறைமுக அதிகாரியொருவருக்கு
15 இலட்சம் ரூபாய் செலுத்தி குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக
ஆரம்ப விசாரணைகளில்
தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது
தொடர்பான மேலதிக
விசாரணைகளை சபுகஸ்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
என்று தெரிவிக்கப்படுகின்றது
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.