புதிய ஜனாதிபதி
மைத்திரியின் பதாதைகளை
உடனடியாக அகற்றுமாறு உத்தவு
புதிய
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவின் பதாதைகளை உடனடியாக அகற்றுமாறு
ஜனாதிபதி செயலகம்
உத்தரவிட்டுள்ளது. தேர்தல்
முடிவடைந்ததும் நாடு முழுவதிலும் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவின் பதாதைகளை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ள
சகல பதாதைகளை
உடனடியாக அகற்றுமாறும். எதிர்வரும்
காலங்களில் இவ்வாறு தமது உருவப்படம் பொறித்த
பதாதைகளை காட்சிப்படுத்த
வேண்டாம் என
ஜனாதிபதி செயலகம்
உத்தரவிட்டுள்ளது.
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜனாதிபதியின் உருவப் படத்துடன் தனது உருவப்
படத்தையும் பொறித்த பதாதைகளை அமைத்து பொலிஸ்
நிலையங்களுக்கு அருகாமையிலும் பொது இடங்களிலும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்
என ஜனாதிபதி
செயலகத்திற்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதுமாத்திரமல்லாமல்
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது
முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸ
தேவையற்ற வகையில்
பதாதைகளை காட்சிப்படுத்த
பொதுமக்கள் பணத்தை விரயமாக்கி வருவதாக எதிர்க்கட்சிகள்
கடுமையாக விமர்சனம்
செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.