அடுத்தடுத்து பூதம் கிளம்புகின்றது!
அலரி மாளிகையில் மஹிந்தவின்
இரகசிய அறையில்
கட்டுக் கட்டாக
பணம்!!
![]() |
மக்களை நம்பாமல் அவர்களை ஏமாற்றி மந்திரக் கோல்களை நம்பி தோற்றுப்போன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ |
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது மாளிகையாக
பாவித்த அலரி மாளிகையின் ஒரு இரகசிய
அறையில் கட்டுக்
கட்டாக பணக்
குவியல் இருந்ததை
உயர் அதிகாரிகள்
கைப்பற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அலரி
மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மட்டும் பயன்படுத்தி வந்த ஒரு அறையை
அதிகாரிகள் திறந்து சோதனையிட்டனர். அப்போது, அந்த
அறையில் ரூ.1,500
கோடி அளவுக்கு
பணம் இருந்தது
கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது
.
இதில்,
இலங்கை ரூபாய்
நோட்டுகளும், பல உலக நாட்டு பணக்
கட்டுகளும் இருந்தன என்றும் கூறப்படுகின்றது.
இவ்வளவு
பெரும் தொகைப் பணத்தை மஹிந்த ராஜபக்ஸ எதற்காக
பதுக்கி வைத்தார்,
இது சட்டவிரோதமாக
சேர்த்த பணமா?
என்று அதிகாரிகள்
விசாரணையைத் ஆரம்பித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இச்செய்திக்கு வெளிநாட்டு ஊடகங்கள்
முக்கியத்துவம் கொடுத்துள்ளன .
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.