பிலிப்பைன்ஸ்
நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியான
பேர்டினட் மார்கோஸ் குடும்பத்தினர் போன்று
வாழ்ந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினர்
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது குடும்பத்தினருக்காக கடந்த காலங்களில் கோடிக்கணக்கில்
பொது நிதி செலவு செய்யப்பட்ட விதம் பற்றி தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து கொண்டுள்ள
நிலையில் தற்போது அவரின் ஆட்சிக்காலத்தில்
அலரி மாளிகையில்
செல்லப் பிராணிகளாக
விலை மதிப்பான
43 நாய்கள் வளர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த
நாய்களை பராமரிப்பதற்கென
பிரத்தியோகமாக அறைவடிவமைக்கப்பட்டு அவை குளிரூட்டப்பட்டு, ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தாகவும் கூறப்படுகிறது.
இதனை
தவிர பெறுமதியான
23 அரிய வகை
பறவைகளும் ஒரு
குதிரையும் இரண்டு போனிக்குதிரைகளும் அலரி மாளிகையில்
செல்லப் பிராணிகளாக
வளர்க்கப்பட்டுள்ளன.
வாகனங்களை
பராமரிப்பதற்காக மாத்திரம் கடந்த வருடம் 250 கோடி
ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும்
தெரியவருகிறது.
இதற்கு முன்னர் இவ்விதமான ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியான பேர்டினட் மார்கோஸ் குடும்பத்தினர் என்பது இங்கு நினைவுக்கூறத்தக்கது
இதேவேளை அலரி மாளிகையில் வளர்க்கப்பட்ட மில்லியன் ரூபா பெறுமதியான மெகோ வகை கிளிகள் நான்கு கூண்டை விட்டு பறந்து போனதுடன் அவற்றை பிடிக்க இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டதாக 2014 ஆம் ஆண்டு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.