தீ விபத்தில்
தந்தையும் இரண்டு வயது குழந்தையும்
தீயில் கருகி உயிரிழப்பு
அம்பாறை
மாவட்டம் வளத்தாப்பிட்டியில் உள்ள இஸ்மாயில்
புரத்தில் நேற்று இரவு இடம்பெற்ற
தீ விபத்தில்
தந்தையும் இரண்டு
வயது குழந்தையும்
தீயில் கருகி
வபாத்தாகியுள்ளனர்.
நேற்று
இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில்
குடிசையில் உறங்கிக்கொண்டிருந்த சின்னத்தம்பி
ஆதம்லெப்பை ( 43வயது ) மற்றும் இவரது இரண்டு
வயது ஆண்
குழந்தை
றியான் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில்
தீயினால் படுகாயமடைந்து
றியா (வயது
5) ஆபத்தான நிலையில் அம்பாறை போதனா வைத்தியசாலை
அதி தீவிர
சிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.
குறித்த
சம்பவம் தொடர்பாக
சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.