டுபாயில் தயாராகி வரும்
உலகின் மிகப்பெரிய
பிரேம் போன்ற கட்டிடம்
டுபாய்
சபீல் பார்க்
அருகில் அமையவுள்ள
புகைப்பட ஃப்ரேம்
போன்ற கட்டிடம்
சுமார் 150 மீட்டர் உயரமும், 93 மீட்டர் அகலத்திலும்,
அமையவுள்ளது. இந்த கட்டிடமானது பழைய டுபாய்
மற்றும் புதிய
டுபாயின் அழகினை
தனித்தனியே ஒரு புகைப்பட ஃப்ரேமிற்குள் காண்பதுபோன்ற
காட்சியைத் தரும் வகையில் அமையவுள்ளது.
இதன்
வாயிலாக ஒட்டு
மொத்த டுபாய்
நகரின் ரம்யமான
அழகையும் நம்மால்
இரசிக்க முடியும்
என்றும், இந்த
முயற்சி சுற்றுலாப்பயணிகளால்
மிகவும் வரவேற்கப்படும்
எனவும் எதிர்
பார்க்கப்படுகிறது.
இந்த
கட்டிடத்தின் கடைசி மேல் தளத்தில் கண்ணாடியால்
அமையவுள்ள தளத்தின்
மூலமாக ஒட்டு
மொத்த டுபாய்
நகரின் எழில்மிகு
அழகை பனோரமிக்
காட்சியில் நம்மால் கண்டுகளிக்க முடியும் என
இதன் வடிவமைப்பாளர்கள்
தெரிவித்துள்ளனர். இந்த கட்டிடத்தின்
ஒரு புறத்தில்
கீழிருந்து மேல் செல்லும் வகையில் கண்ணாடியினால்
அமையவுள்ள லிஃப்ட்
மூலம் பழைய
டுபாய் பகுதிகளான
கராமா, உம்
ஹுரைர், பர்
டுபாய், தெய்ரா
மற்றும் டுபாய்
கிரீக் போன்ற
பகுதியினை காணமுடியும்
எனவும் அதே
போல மற்றொரு
பக்கத்தில் உலகத்தின் மிக உயரமான கட்டிடமான
புர்ஜ் கலீஃபா,
புகழ் பெற்ற
ஏழு நட்சத்திர
ஹோட்டலான புர்ஜ்
அல் அரப்
போனற புது
டுபாயின் அழகினைக்
காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
புகைப்பட ஃப்ரேம்
கட்டிடம் இந்த
வருட இறுதிக்குள்
கட்டி முடிக்கப்பட்டு
பயன்பட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.