கல்முனை மாநகர சபை
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்
உறுப்பினர் இஸட். ஏ. எச். ரஹ்மான் விளக்க மறியலில்
கல்முனை
மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் இஸட். ஏ. எச். ரஹ்மான்
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவரை பெப்ரவரி 11ஆம் திகதி வரையிலும் விளக்கமறியில்
வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பி யூட்சன் உத்தரவிட்டுள்ளார்.
தனிநபரொருவரை
தாக்கியது தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட ஆணையை மதிக்காமல் நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின்
பேரில் பொலிஸாரினால் அவர் தேடப்பட்டுவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே
அம்பாறை குற்றப்புலனாய்வு பிரிவினரால் அவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.