மர்ஹும் அன்வர்
இஸ்மாயில் அவர்களின்
மரணம் தொடர்பாகவும் விசாரணை தேவை
மக்கள்
கோரிக்கை!
மர்ஹும்
அன்வர் இஸ்மாயில் அவர்களின் மரணம் தொடர்பாகவும் விசாரனை தேவை என்று மக்கள் கோரிக்கை
விடுக்கின்றனர்.
இவரின்
மரணத்திற்கு முன்னர் இவர் இராஜினாமாச் செய்து அந்த இடத்தை பசீல் ராஜபக்ஸவுக்கு விட்டுக்
கொடுக்கும்படி கேட்கப்பட்டதாகவும் அதற்கு மர்ஹும் அன்வர் இஸ்மாயிலும் அன்னாரின் ஆதரவாளர்களும்
பல நிபந்தனைகளை விதித்து அவைகளை நிறைவேற்றும்படி வேண்டியதாகவும் அதன் பின்னரே இவரின்
மரணம் சம்பவித்தது என்றும் மக்களால் அன்று தெரிவிக்கப்பட்டது.
இவரின்
மரணத்தின் பின்னர் இவரின் இடத்திற்கு பசீல் ராஜபக்ஸ நியமிக்கப்பட்டதும் அமைச்சர் பதவி
வழங்கியதும் தெரிந்ததே. இவரின் திடீர் மரணம் சகலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தும்
அரசியல் அதிகாரம் மிகைத்திருந்த்தால் எவராலும் எதுவும் பேச முடியாத நிலை அன்றிருந்தது.
சகலருக்கும் துக்கத்தை ஏற்படுத்தியிருந்த இவரின்
மரணம் குறித்தும் விசாரணை செய்யப்படல் வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.