முன்னாள்
ஜனாதிபதியின் மகன் யோசித்த ராஜபக்ஸவுக்கு
எதிராக இன்று
முறைப்பாடு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது மகன் யோசித்த
ராஜபக்ஸ இலங்கை கடற்படையில் இணைந்து கொண்ட
விதம் குறித்து
விசாரணை மேற்கொள்ளுமாறு
முறையிடப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இங்கிலாந்தின்
டாக்மாத் அரச
கடற்படை பல்கலைக்கழகத்தில்
புலமைப்பரிசிலை பெற்ற இவர் அங்கு பயிற்சிநெறியை
நிறைவு செய்யாமலேயே
இலங்கை திரும்பி
கடற்படையின் பெஜ்டொப் பயிற்சியை எவ்வாறு நிறைவுசெய்தார்
என்று விசாரணை
செய்யுமாறு கோரியே முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.
அரச
பணியில் இருந்துகொண்டு
எவ்வாறு இவர்
தனியார் நிறுவனம் ஒன்றை நடத்திச்
செல்ல முடியும்
என்றும் விசாரணை
செய்யுமாறு பாதுகாப்பு
செயலாளரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும்
தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.