இன்று 18 ஆம் திகதி சுவடிக் கூட கேட்போர் அரங்கத்தில்
ரவூப் ஹக்கீம் தலைமையில் மசூர் மெளலானா நினைவேந்தல் நிகழ்வு
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
ஏற்பாட்டில் மசூர் மெளலானா நினைவேந்தல் நிகழ்வு
திர்வரும் இன்று
18 ஆம் திகதி
வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கருவாத் தோட்டப்
பொலிஸ் நிலையத்திற்கு
முன்னால் உள்ள
சுவடிக் கூட
கேட்போர் அரங்கத்தில்
இடம்பெறும்.
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
தலைவரும் நகர
திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப்
ஹக்கீம் தலைமையில்
இடம்பெறும் இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
தலைவரும் எதிர்கட்சித்
தலைவருமான ஆர்.
சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும்
பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, சவூதிஅரேபியாவின்
முன்னாள் பிரதி
உயர்ஸ்தானிகர் டாக்டர் ஏ. உதுமாலெவ்வை
ஆகியோர் சிறப்பு
பேச்சாளர்களாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவார்கள்
என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன்போது செனட்டர் மசூர் மௌலானாவின் அரசியல் பொது வாழ்வைப் பிரதிபலிக்கும் குறுந்திரைப்படம் ஒன்றும் காண்பிக்கப்படவுள்ளது என ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
இதில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், வெளிநாடுகளின் தூதுவர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் என பல தரப்பினரும் கலந்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது..
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.