கொழும்பில் இடம்பெற்ற
மர்ஹூம் மசூர்
மௌலானாவின் நினைவேந்தல் நிகழ்வு
கிழக்கின்
மூத்த அரசியல்
தலைவரும் முன்னாள்
கல்முனை மாநகர
முதல்வரும் செனட்டருமான மர்ஹூம் எஸ்.இசட்.எம்.
மசூர் மௌலானாவின்
நினைவேந்தல் நிகழ்வு நேற்று 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சுவடிக்கூட கேட்போர் கூடத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவரும்
அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில்
சிறப்பு பேச்சாளர்களாக
இலங்கை தமிழ்
அரசுக் கட்சியின்
தலைவரும் பாராளுமன்ற
உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, முன்னாள் சவூதி அரேபியா
பிரதி உயர்ஸ்தானிகர்
ஏ. உதுமாலெப்பை அவர்களும்
கலந்து கொண்டு
உரையாற்றினார்கள்.
முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர், முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாகீர் மெளலானா,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் உட்பட பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்
ஸ்ரீ
லங்கா முஸ்லிம்
காங்கிரஸினால் மருதமுனை பள்ளிவாசல் புணர் நிர்மாணத்திற்காக
25 இலட்சம் ரூபா நிதி உதவியும் இந்நிகழ்வில்
வழங்கி வைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.