நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நுழைவாயிலில்
நாடாளுமன்ற
உறுப்பினர் வடிவேல் சுரேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நுழைவாயிலில் தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின்
சம்பள விவகாரம்
தொடர்பிலேயே அவர் இவ்வாறு தீக்குளிக்க முயற்சித்துள்ளார்
என தெரிவியவருகிறது
இவர்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்நுழையும் வாயிலில் வைத்து
காவற்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில்,
அவரை தமிழ்
முற்போக்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக்குள்
அழைத்து சென்றதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
பெருந்தோட்ட
தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு
இன்றைய தினத்திற்குள்
வழங்கப்படாதவிடத்து அதனுடன் தொடர்புடையவர்களை
அணைத்து கொண்டு
தாம் நாடாளுமன்றில்
தீக்குளிக்க போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல்
சுரேஷ் நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.