அரச பொறியியற் கல்வியைப்
பாதுகாப்போம்
தென்கிழக்கு பல்கலை
மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
தென்கிழக்கு
பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு
வாட் பிளேஸில்
அமைந்துள்ள பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால்
இன்று 21 ஆம் திகதி காலை 9.30மணியளவில்
ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்
குறித்த
ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தோர் தெரிவித்ததாவது,
பொறியியல் பீட மாணவர்களாகிய எங்களுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிற்சிகளைப்
பெற்றுக் கொள்வதற்கு போதியளவு
வசதிகள் இல்லை.
எமது பல்கலைக்கழக
அமைவிடமும் இதற்கு பொருத்தமானதாகவும் இல்லை.
இது பற்றி
கடந்த அரசாங்கத்திடமும்
இந்த நல்லாட்சி
அரசாங்கத்திடமும் எழுத்து மூலமாக பல கோரிக்கைகளை,
பல தடவைகள்
முன் வைத்தோம்,
ஆனால் அதற்கான
எந்த விதமான
நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.
கடந்த
10ஆம் திகதி
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு
முன்னால் போராட்டம்
ஒன்றை முன்னெடுத்திருந்தோம்.
அதற்கான தீர்வு
கிடைக்காதமையினாலேயே மீண்டும் இன்று
போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இதற்கும்
தீர்வு கிடைக்காவிடின்
மேலும் போராட்டங்களை
தொடர்ந்து நடத்துவோம்
என்றும் தெரிவித்தனர்.
இந்த
பல்கலைக்கழகத்தில் வடகிழக்கைச் சேர்ந்த
தமிழ் மாணவர்கள்
பலர் கல்வி
கற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, கொழும்பு நகர மண்டப சுற்றுவட்டத்தில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.