மாணவர்கள் முதலாம் தர
அனுமதி
இலஞ்சம் கேட்டால் முறையிடலாம்
மாணவர்களை முதலாம் தரத்திற்கு பாடசாலையில் அனுமதிக்கும் போது இலஞ்சம் கேட்கப்பட்டால் அறிவிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி அடுத்த வருடம் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அரச பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளும் பொருட்டு பாடசாலை நிர்வாகத்தால் அரசாங்கத்தினால் குறிப்பிட்டுள்ள பணத்திற்கு மேலதிகமாக பெற்றோரிடம் இலஞ்சம் கேட்கப்படும் பட்சத்தில் முறைப்பாடு செய்யமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இவ்வாறு பாடசாலை அதிபர்கள் இலஞ்சம் கோருவதாகவும், பெற்றோரும் இலஞ்சம் கொடுத்து சிறுவர்களை பிரபலமான பாடசாலைகளில் சேர்க்க முற்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.