முகத்தில் அதிக மேக்-அப்
அந்தப் இளம் பெண்ணுக்கு பஸ்ஸில் நேர்ந்த கதி

அதிகமாக ஒப்பனை (மேக்-அப்) செய்ததாகக் கூறி இளம் பெண்ணொருவர் பஸ்ஸில் இருந்து பாதி வழியிலேயே இறக்கிவிடப்பட்ட சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இங்கிலாந்து நாட்டில் இடம்பெற்றுள்ளது இதுகுறித்து தெரியவருவதாவது,
கடந்த வாரம் சஹ்ரா சாதிக் என்ற 15 வயது சிறுமி, இங்கிலாந்தில் உள்ள பேர்மிங்காம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்ஸில் பயணம் செய்துள்ளார். அப்போது அந்த பஸ்ஸில் இருந்த பெண் நடத்துனர், சஹ்ரா சாதிக்கின் சிறுமிகளுக்கான பயணச் சீட்டை வாங்கி பரிசோதித்துள்ளார்.
பின்னர் உன்னையும் உன் ஒப்பனையையும் பார்த்தால் சிறுமி போல் தெரியவில்லை என்று கூறி அந்த பெண்ணை நடுவழியில் இறக்கிவிட்டுள்ளார்.
இது மாத்திரமல்லாமல் 35 பவுண்ஸ் அபராதமும் விதித்துள்ளார். தற்போது இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், அடையாள அட்டை எடுத்துச் செல்லாததால் எனது வயதை நிரூபிக்க முடியவில்லை. இருப்பினும் என்னுடைய பாடசாலை புகைப்படங்களை காட்டியபோதும் அதை நடத்துனர் நம்பவில்லை என்று கூறியுள்ளார்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top