கீழக்கரையில் இடம்பெறும் மீலாத் விழாவில்
சிறப்பு பேச்சாளராக அஷ்ஷெய்க்
ஏ.ஏ.அலி அஹமது (ரஷாதி)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தின விழா நாளை 29 ஆம் திகதி செவ்வாய்கிழமை
அஸர் தொழுகையின் பின்னர் (மாலை 4.00 மணிக்கு) கீழக்கரை நடுத்தெரு ஜும்ஆ மஸ்ஜித்
வளாகத்தில் அமைந்துள்ள வள்ளல் சீதக்காதி மண்டபத்தில் இடம்பெறும் என
அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இவ்விழாவில் சிறப்பு பேச்சாளராக ஸ்ரீ லங்காவைச்
சேர்ந்த மெளலவி அஷ்ஷெய்க் ஏ.ஏ.அலி அஹம்து (ரஷாதி) கலந்து கொண்டு உரைநிகழ்த்துகின்றார்.
மெளலவி அல்ஹாஜ் எப்.ஸிராஜுத்தீன் அஹமது (ரஷாதி) ஸ்தாபகர், முதல்வர், தாருல் உலும் ஸஉதிய்யா அரபுக் கல்லூரி சிந்தாமணிப்பட்டி. அல்ஹாஜ் எம் சம்சுத்தீன் (காஸிமி) தலைமை இமாம், மக்கா
மஸ்ஜித் சென்னை. ஆகியோரும் இவ்விழாவில் உரை நிகழ்த்துவார்கள்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.