ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த
இந்தியப் பிரஜைகள் நால்வர் கல்முனையில் கைது
90 இலட்சம் பெறுமதியான சீலைகளும் மீட்பு!
கல்முனை
நகரில் சட்ட
விரோதமாக தங்கியிருந்து
ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த நான்கு
இந்தியப் பிரஜைகள்
கல்முனைப் பொலிஸாரினால்
கைது செய்யப்படுள்ளனர்.
இவர்களிடமிருந்து
சுமார் 90 இலட்சம்
ரூபா பெறுமதியான
சீலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன எனத்
தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலா
விசாவில் இலங்கைக்கு
விஜயம் செய்துள்ள
இவர்கள் கடந்த
சில காலமாக
இலங்கையின் பல பாகங்களிலும் ஆடை வியாபாரத்தில்
ஈடுபட்டு வந்துள்ளனர்
என பொலிஸாரின்
முதற்கட்ட விசாரணைகளின்போது
தெரிய வந்துள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள்
நால்வரையும் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்
செய்வதற்கு கல்முனைப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.