சவூதியில்
இலங்கை பிரஜை ஒருவர் கொலை!
சவூதி
ரியாத் நகரில்
கண்ணாடி தொழிற்சாலையில்
பணிபுரியும் 32 வயதான இலங்கை பிரஜை ஒருவர்
கொலை செய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட நபரின் அறையில் தங்கியிருந்த மற்றும் ஒரு நபரினால் இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூரிய
ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில்,சடலம் அவர்
தங்கியிருந்த அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக
அந்நாட்டு பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்
சம்பவம் தொடர்பில்
யேமன் நாட்டு
பிரஜையொருவரை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை,
குறித்த கொலைக்கான
காரணங்கள் எதுவும்
இதுவரை அறியப்படவில்லை
என வெளிநாட்டு
ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.