இளம் வர்த்தகர்
முஹம்மட் சகீப் சுலைமான் படுகொலை!
இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கோடீஸ்வர
வர்த்தகர் முஹம்மட் சகீப்
சுலைமான் படுகொலையுடன்
தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், இருவரை
பொலிஸார் கைது
செய்துள்ளனர்.
கிராண்ட்பாஸ்
மற்றும் சேதவத்தை
ஆகிய பகுதிகளைச்
சேர்ந்த இருவரே,
இன்று பிற்பகல்
கைது செய்யப்பட்டனர்
என்றும் இவர்களே,
சுலைமானின் தகப்பனாரிடம் கப்பம் கோரியிருந்தனர் என்றும்
பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த வர்த்தகர், கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில், பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு முன்னால் வைத்து, இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டே படுகொலை செய்யப்பட்டார். அவரது சடலம், ஹெம்மாத்தகம பிரதேசத்திலிருந்து, 24 ஆம் திகதி புதன்கிழமை (24) இரவு மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.