விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவை

விளக்கமறியலில் வைக்க உத்தரவு

பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்சவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரச வாகனத்தை முறைகேடான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய அவர் இன்று கைது செய்யப்பட்டிருந்தார்.

சரத் வீரவன்ச இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து நிதி மோசடி விசாரணைப் பிரிவு பொலிஸார் அவரை கைது செய்துள்ளதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருந்தனர்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top