வில்பத்து சரணாலயத்தின் நான்கு ஏக்கர்
பாதுகாப்பு காட்டுப் பகுதி பாதுகாப்பு வனப் பிரதேசம்
- வர்த்தமானி அறிவிப்பு
வில்பத்து
சரணாலயத்தின் வடக்கில் அமைந்துள்ள நான்கு ஏக்கர்
பாதுகாப்பு காட்டுப் பகுதியை பாதுகாப்பு வனப்
பிரதேசமாக பிரகடனப்படுத்துவதற்கான
வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
கைச்சாத்திட்டுள்ளார்.
இந்த
அறிவிப்பை ரஷ்யாவுக்கான
விஜயத்தின் போது மொஸ்கோ நகரில் வைத்து
கைச்சாத்திட்டுள்ளார்.
இதன்
கீழ் வில்பத்து
சரணாலயத்தின் வடக்கில் அமைந்துள்ள பிரதேசம் வனப்
பாதுகாப்புத் திணைக்களத்திற்கு உட்பட்ட மாவில்லு, வெப்பல்,
கரடிகுழி, மறிச்சக்கட்டி,
விலச்சிக்குளம், பெரியமுறிப்பு ஆகிய வனப் பிரதேசங்களை
ஒன்றிணைத்து மாவில்லு பாதுகாப்பு வனப் பிரதேசமாக
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.