பயங்கர தீயால் தேசிய நெடுஞ்சாலை பாலம் தகர்ந்தது
போக்குவரத்து கடும் பாதிப்பு
அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர தீயால் தேசிய நெடுஞ்சாலை பாலம் தகர்ந்தது. இதனால், அங்கு மாநிலங்களுக்கு இடையிலான சாலை போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளானதாக அறிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தை இதர மாநிலங்களுடன் இணைக்கும் 85-ம் எண் நெடுஞ்சாலையில் உள்ள பிரதான பாலத்தின் அடியில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்து பாலத்தை முழுமையாக கபளீகரம் செய்தது.
தீயின் வெம்மையால் சேதமடைந்த பாலத்தின் ஒரு பகுதி நொறுங்கி விழுந்தது. இதனால், அவ்வழியாக பிற மாநிலங்களுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பல மைல்களை சுற்றிகொண்டு மாற்றுப் பாதையில் செல்ல நேரிட்டுள்ளது.
எனினும், அருகாமையில் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களது வீடுகளை சென்றடைய இயலாமல் பெரும் பரிதவிப்புக்கு உள்ளாகி இருப்பது, குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.