சிமெண்ட் லாரி கவிழ்ந்ததில்
10 பேர் சம்பவ இடத்திலேயே பலி.
வங்கதேசம், மைமென் சிங் மாவட்டத்தில் இன்று அதிகாலை சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியில் 15 பேர் பயணித்துள்ளனர். இந்த லாரி மெஹெர்பார்கி எனும் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிமெண்ட் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் நான்கு குழந்தைகள் உட்பட 10 பேர் சம்ப இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் சிலர் ஆபத்தான நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வங்கதேசத்தில் குறைந்த கட்டணத்தில் இதுபோன்ற லாரிகளில் பயணம் செய்வதை ஏழை, எளிய மக்கள் விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.