தமிழ் மொழி மூலம் தேசிய மட்டத்தில்
முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள மாணவன்
2016ம் ஆண்டு க.பொ.த சாதாரண
தர பரீட்சை
பெறுபேறுகள் இன்றையதினம் வெளியாகியுள்ளது.
யாழ்.இந்து கல்லூரி
மாணவன் அ.அபிநந்தன் 9 பாடங்களில்
முதற்தர சித்தி
பெற்று தேசிய
மட்டத்தில் தமிழ் மொழிமூலம் 1ம் இடத்தினை
பெற்றுச் சாதனை
படைத்துள்ளார்.
இவ்விடயம் குறித்து அ.அபிநந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
எனது தாய் ஆசிரியர், தந்தை மருந்தாளர் எனது பெற்றோர் மற்றும் சித்தியின் ஊக்கமளிப்பினால் நான் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளேன்.
இந்நிலையில் உயிரியல், விஞ்ஞான துறையில் தொடர்ந்து கல்வி கற்பதற்கு விரும்புகிறேன். அது தவறினால் நோய்கள் பற்றிய ஆய்வுதுறையில் கல்வியை கற்க விரும்புகிறேன். அதேபோல் எனது வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றிகள் என எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.