முஸ்லிம் காங்கிரஸில்அனைத்து பதவிகளிலுமிருந்தும்
அன்சில் இடைநிறுத்தம் தவிசாளராக
ஏ.எல்.ஏ.மஜீத்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட கூட்டம் 28 ஆம் திகதி இரவு கட்சியின் தலைமயகாமான தாருஸ்ஸலாமில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் கூடியது.
அதில் அன்சில் அவர்கள் வகித்து வந்த அதியுயர்பீட உறுப்பினர் பதவியிலிருந்தும் மற்றும் பாலமுனை அமைப்பாளர், அம்பாறை மாவட்ட செயற்குழு செயலாளர் போன்ற பதவிகளிலிருந்தும் இடைநிறுத்த பட்டுள்ளதோடு, பாலமுனை கிராமத்துக்கு அமைப்பாளர் ஒருவர் நியமிக்கும் வரைக்கும் தலைவர் அவர்களே அமைப்பாளராக கடமையாற்றுவார் என்றும் அதியுயர்பீடம் தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் வெற்றிடமாக இருந்த கட்சியின் தவிசாளர் பதவிக்கு (முழக்கம்) ஏ.எல்.அப்துல் மஜீதை நியமிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு அவர் வகித்துவந்த மூத்த துணைத் தலைவர் பதவிக்கு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ராவூத்தர் நைனா முகம்மத் நியமிக்கப்பட்டுள்ளார். .
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.