விமல் வீரவங்சவை மீட்டு எடுப்போம்
கூட்டு எதிர்க்கட்சியினரின் கூட்டத்தில்
இன்று சத்தியப்பிரமாணம்
சிறைவாசத்தோடு
உண்ணாவிரதத்தையும் மேற்கொண்டு இருக்கும்
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவை மீட்டு
எடுப்போம் என்று
சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டது.
காலி
நகரில் இன்று
கூட்டு எதிர்க்கட்சியினரின்
கூட்டம் இடம்
பெற்றது. குறித்த
கூட்டத்திலேயே இவ்வானதொரு சத்தியப் பிரமாணம் எடுக்கப்பட்டது.
நாடாளுமன்ற
உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன சத்தியப்பிரமாணத்தை வாசிக்கத் தொடங்க அதனை பூரணமாக
ஏற்று நிறைவேற்ற
பொதுமக்கள் மற்றும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள்.,கூட்டத்திற்கு வந்திருந்த
அனைவரையும் எழுந்து கைகளை உயர்த்தி சத்தியம்
செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதனைத்
தொடர்ந்து அனைவரும்
எழுந்து கைகளை
உயர்த்தியவாறு, “சிறையில் துன்பப்பட்டு கொண்டு
இருக்கும் விமல்
வீரவன்ச இன்றுடன்
70 நாட்கள் சிறையில், இருட்டறையில் வைக்கப்பட்டுள்ளார்.அவரை நீதிமன்றம் கைவிட்டாலும் நாம்
கைவிடாமல் அவரை
மீட்டு எடுப்போம்
என சத்தியம்
செய்கின்றோம் என்று அனைவரும் ஒருங்கிணைந்து சத்தியம்
செய்து கொண்டார்கள்.
மேலும்
விமலுக்காக மக்கள் பேரணி ஒன்றினையும் ஏற்பாடு
செய்ய உள்ளதாக
கூட்டத்தில் உரையாற்றியவர்கள் தெரிவித்திருந்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.