நாளை 29 ஆம் திகதி (புதன்கிழமை)
15 மணித்தியால நீர் விநியோகத் தடை
கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான 15 மணித்தியாலத்திற்கு; நீர்விநியோகம் இடைநிறுத்தப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டே, கடுவெல ஆகிய மாநகரசபை பிரதேசங்களிலும் மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ ஆகிய நகரசபை பிரதேசங்களிலும், கொட்டிகாவத்தை, முல்லேரியா, ஆகிய பிரதேசசபை எல்லைகளிலும் இரத்மலானை பகுதியிலும், நாளை புதன்கிழமை காலை 9 மணி முதல் இரவு 12 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் முக்கிய பரமாரிப்பு வேலைகள் காரணமாக அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சாரம் இடைநிறுத்தப்படுவதினால் நீர் நீர்விநியோகம், நாளை புதன்கிழமை காலை 9 மணி முதல் இரவு 12 மணி வரை இடைநிறுத்தப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.