ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும்
ரஷ்ய ஜனாதிபதி
விளாடிமிர் புட்டின்
அவர்களுக்குமிடையிலான
உத்தியோகபூர்வ சந்திப்பு
சிறப்பு பரிசொன்றும் வழங்கப்பட்டது
ரஷ்யாவில்
மூன்றுநாள் விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன அவர்களுக்கும்
ரஷ்ய ஜனாதிபதி
விளாடிமிர் புட்டின் அவர்களுக்குமிடையிலான
உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று 23 ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்றது. சந்திப்பின்
விசேட நினைவாக
ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன அவர்களுக்கு
ரஷ்ய ஜனாதிபதி
விளாடிமிர் புட்டின் அவர்கள் சிறப்பு பரிசொன்றை
வழங்கினார்.
19 ஆவது
நூற்றாண்டுக்குரிய கண்டி யுகத்தின்
அரச வாள்
விளாடிமிர் புட்டின் அவர்களால் ஜனாதிபதி அவர்களுக்கு
வழங்கப்பட்டது. 1906 ஆண்டளவில் பிரித்தானியாவுக்கு
கொண்டுசெல்லப்பட்ட இந்த வாள்
பிரித்தானியாவில் நடைபெற்ற Sotheby எனப்படும்
புராதனப் பொருட்கள்
ஏல விற்பனையில்
ரஷ்யாவினால் கொள்வனவு செயய்ப்பட்டிருந்தது.
இருநாடுகளுக்கும்
இடையிலான உறவின்
குறியீடாக அந்த
புராதன வாள்
ஜனாதிபதி விளாடிமிர்
புட்டின் அவர்களால்
இலங்கை ஜனாதிபதிக்கு
இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.