மூன்றாவது நாளாக தொடரும்
விமலின் உண்ணாவிரதப் போராட்டம்
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றைய தினமும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.
நீரையும் அருந்தாமல் அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதால், அவரின் இரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
70 நாட்களுக்கு மேலாக தான் சிறையில் இருக்கின்ற போதும் தனக்கு பிணை வழங்காமல் மறுக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து விமல் வீரவங்ச சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
இதேவேளை, விமலின் மகளும் உணவு உண்ணாமல் இருந்தமையால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
என்றும் கூறப்படுகின்றது.
அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.