நாமல் ராஜபக்ஸவிடம் நாளை விசாரணை
ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை!
முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவுக்கு நாளை ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளுக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் நாமல் ராஜபக்ஸவின் தலைமையில் நீலப் படையணி என்றொரு இளைஞர் அமைப்பு இயங்கி வந்தது.
இதன் அங்கத்தவர்களுக்கு 2014ம் ஆண்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன.
இதற்கான கொடுப்பனவாக பல மில்லியன் ரூபா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு நீலப்படையினரால் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த பயிற்சிகளுக்கான கொடுப்பனவு வழங்குவதற்கான மில்லியன் கணக்கான பணம் எங்கிருந்து கிடைத்தது என்பது தொடர்பில் விசாரணையொன்றுக்கு ஆஜராகுமாறு நாமல் ராஜபக்ஸவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.
இது தொடர்பான விசாரணை நாளை ஜனாதிபதி ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.