கல்முனை, பொத்துவில் செல்லும் அமைச்சர் ஹக்கீம்
பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கின்றார்



மண்ணெல்லாம் மரத்தின் வேர்கள்எனும் தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொள்ளும் நிகழ்வுகள் நாளை வெள்ளிக்கிழமை நாளை மறுதினம் சனிக்கிழமை ஆகிய தினங்களில், கல்முனை, பொத்துவில் பிரதேசங்களில் நடைபெறவுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை கல்முனையில் “சுமந்து வந்த அபிவிருத்திகளை மக்களின் பாவனைக்கு கையளிக்கவுள்ளதாகவும் மாபெரும் பொதுக்கூட்டம் இடம்பெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் சனிக்கிழமை பொத்துவிலில் அபிவிருத்தி விழாவும் பொதுக் கூட்டமும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிணங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் நாளை 31 ஆம் திகதி  வௌ்ளிக்கிழமை கல்முனையில் முதல் நாள் நிகழ்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கல்முனை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக பொதுக்­கூட்டம் நடைபெறும் என அறிவித்தல் வழங்கப்பட்டிருக்கிறது.
நாளை மறுதினம் சனிக்கிழமை பொத்துவில் மண்ணில் அபிவிருத்தி விழாவும் பொதுக்­கூட்டமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளரும் சுகாதார பிரதி அமைச்சருமான பைசால் காசிம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், நாடாளுமன்ற உறுப்பினர் எம்..எம். மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் .எல்.எம். நசீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ.ரஸ்ஸாக் (ஜவாத்), ஆரிப் சம்சுதீன், .எல். தவம், .எல்.எம். மாஹிர், கட்சியின் தவிசாளர் .எல்.. மஜீட் உட்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top