அமரர் ரணசிங்க பிரேமதாஸ அவர்களது
24 ஆவது நினைவு தின நிகழ்வு
இலங்கையின்
இரண்டாவது நிறைவேற்று
ஜனாதிபதி, அமரர்
ரணசிங்க பிரேமதாஸ
அவர்களது 24 ஆவது நினைவு தின நிகழ்வு,
ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன அவர்களது
தலைமையில் கொழும்பு
புதுக்கடை நீதிமன்றத்துக்கு
அருகிலுள்ள ரணசிங்க பிரேமதாஸ அவர்களது உருவச்சிலை
முன்றலில் இன்று
(01) முற்பகல் நடைபெற்றது.
வணக்கத்துக்குரிய
பௌத்த மதகுருமார்களின்
வழிபாட்டுடன் ஆரம்பமான நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி
அவர்கள் பௌத்த
மதகுருமார்களுக்கு காணிக்கைகளை வழங்கினார்.
அத்துடன்
ஜனாதிபதி அவர்கள்,
ரணசிங்க பிரேமதாஸ
அவர்களது உருவச்சிலைக்கு
மலரஞ்சலி செலுத்தினார்.
அதிவணக்கத்துக்குரிய
இத்தேபான தம்மாலங்கார
தேரர், அதிவணக்கத்துக்குரிய
நியங்கொட விஜிதசிறி
தேரர் உள்ளிட்ட
பௌத்த மதகுருமார்களும்
பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசுரிய உள்ளிட்ட
மக்கள் பிரதிநிதிகளும்
அமைச்சர் சஜித்
பிரேமதாஸ, ஹேமா
பிரேமதாஸ அம்மையார்
உள்ளிட்ட ரணசிங்க
பிரேமதாஸ அவர்களது
குடும்ப உறுப்பினர்களுடன்
பெருமளவானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.