சிரியாவில் முஸ்லிம் பெண்களை கண்காணிப்பதற்கு

ஐ.எஸ்.ஐ.எஸ். 'பெண்கள் படையணி'

சிரியாவில் இஸ்லாமிய சட்டத்தை பெண்கள் கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க சன்னி முஸ்லிம்களின் ஆயுத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் 'பெண்கள் படையணி' உருவாக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் ஷியா ஆதரவு அரசுக்கு எதிராக .எஸ்..எஸ். அமைப்பின் போராளிகள் சண்டையிட்டு வருகிறார்கள். அந்நாட்டின் மொசூல், திக்ரித், கர்பாலா உள்பட பல்வேறு நகரங்களை கைப்பற்றினர் .எஸ்..எஸ். சன்னி போராளிகள் தாங்கள் ஏற்கனவே சிரியா நாட்டில் கைப்பற்றிய பகுதிகளையும், ஈராக்கின் வடக்கு எல்லையோரம் கைப்பற்றிய பகுதிகளையும் ஒன்றாக இணைத்து இஸ்லாமிய நாடு என்ற ஒரு நாட்டை உருவாக்கினர். ஈராக், சிரியா நாடுகளில் கைப்பற்றிய பகுதிகளுக்கு போராளிகள் இஸ்லாமிய நாடு என்று பெயர் சூட்டி உள்ளனர். இந்த நாட்டுக்கு தலைவராக அபு பக்கீர் அல்-பகாதி என்பவரையும் அறிவித்தனர்.
சிரியாவில் இஸ்லாமிய சட்டத்தை பெண்கள் கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க சன்னி முஸ்லிம்களின் ஆயுத அமைப்பான .எஸ்..எஸ். இயக்கத்தில் 'பெண்கள் படையணி' உருவாக்கப்பட்டுள்ளது. சன்னி முஸ்லிம்களின் ஆயுதப்படையான .எஸ்..எஸ். சிரியாவின் ரக்கா உள்ளிட்ட நகரங்களையும் ஈராக்கில் மொசூல் உள்ளிட்ட நகரங்களையும் கைப்பற்றி தனிதேசமாக பிரகடனப்படுத்தி உள்ளது.
ஷரியத் சட்டத்தை இஸ்லாமிய பெண்கள் முழுமையாக கடைபிடிக்கிறார்களா? என்பதுதான் இந்த பெண்கள் படையணியின் முதன்மைப் பணிகளில் ஒன்று
 இது குறித்து ரக்காவில் .எஸ்..எஸ். அமைப்பின் தளபதிகளில் ஒருவரான அபு அகமது கூறுகையில், பெண்களுக்கு என்று தனி படையணி உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் படைப் பிரிவில் சேருவோருக்கு தனியே அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

பெண்களை கண்காணிக்க கடந்த மாதம் ஈராக்கின் மொசூல் உள்ளிட்ட நகரங்களைக் கைப்பற்றிய பின்னர்தான் இப்படையணி உருவாக்கப்பட்டது. இஸ்லாத்தை முழுமையாக பெண்கள் கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அப்படி கடைபிடிக்காத பெண்களை கைது செய்து தண்டித்தல் ஆகியவற்றை இந்த படையணி மேற்கொள்ளும்.
போராளிகளின் மனைவிகளும்.. இந்தப் படையணியில் தற்போது ரக்கா நகரைச் சேர்ந்த பெண்களோ அல்லது சிரியாவின் இதர பகுதிகளில் உள்ள .எஸ்..எஸ். இயக்கத்தில் உள்ள முஜாஹிதீன்களின் மனைவியரோ இணைந்து கொள்ளலாம் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்த படையணியால் கைது செய்யப்பட்ட ஜைனாப் என்ற இளம்பெண் கூறுகையில், நான் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆயுதமேந்திய பெண்கள் படை  திடீரென என்னை சுற்றி வளைத்து கைது செய்தது. பின்னர் அவர்களது இடத்துக்கு கொண்டு சென்று ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.
 என்னிடம் இஸ்லாமிய வழிபாடுநோன்பு குறித்து கேள்விகளை துப்பாக்கி முனையில் கேட்டனர்பின்னர் தெருவில் தனியாக நடந்து சென்றதாலும் இஸ்லாம் பெண்களுக்குரிய உடையை முறையாக அணியாத காரணத்தாலுமே என்னை கைது செய்ததாக கூறினர்பின்னர் எச்சரித்து விடுதலை செய்தனர்ஆறு மணி நேரம் அவர்களது சிறையில் இருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் மனித உரிமை செயற்பாட்டாளர்களோ பெண்களை அச்சுறுத்தும் வகையில் .எஸ்..எஸ்இயக்கம் நடந்து கொள்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top