உலகத்தின் முடிவு பகுதியில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பள்ளம் : 

இது எதன் அறிகுறி?

ரஷ்யாவை அடுத்த செர்பியா நாட்டின் யாமல் தீபகற்பத்தில் திடீரென ஒரு மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா - செர்பியா எல்லைப் பகுதியான யாமல் தீபகற்ப பகுதி உலகத்தின் முடிவு (என்ட் ஆப் தி வேர்ல்ட்) என்று அழைக்கப்படும் இடமாகும். இங்கு சில நாட்களுக்கு முன்பு 80 மீட்டர் அகலம் கொண்ட மிகப்பெரிய பள்ளம் தானாகவே உருவாகியுள்ளது. இதன் ஆழம் எவ்வளவு என்பதை கண்டறிய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்த பள்ளம் உண்டானதன் பின்னணி என்ன என்பதையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். உலகத்தின் முடிவு என்று அழைக்கப்படும் இவ்விடத்தில் ஏற்பட்டுள்ள பள்ளம் எதன் அறிகுறி என்று மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top