விரைவில் மேலும் 1000 புதிய
கிராமநிலதாரிகள்
நாடளாவிய
ரீதியில் நிலவும் கிராம நிலதாரி வெற்றிடங்களை
நிரப்பும் வகையில் மேலும் 1000 கிராம நிலதாரிகளை புதிதாக நியமிப்பதற்கு பொது நிர்வாக
உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடளாவிய ரீதியில் மேலும் சுமார் 1600 வெற்றிடங்கள் தற்போது நிலவுகின்றன. அவற்றை நிரப்பும் வகையில் 1000 பேருக்கு நியமனங்களை
வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே
நடத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சையில் நியமனம் பெற்றவர்களுக்கு அடுத்ததாக அதிக புள்ளிகளைப்
பெற்றுக் கொண்டவர்களிலிருந்து நேர்முகப் பரீட்சை மூலம் மேலும் 1000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு
அவர்களுக்கு நியமனம் வழங்கப்படும் எனவும் அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நாடளாவிய ரீதியில் 4ஆயிரம் கிராம நிலதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன
என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.