ஆசிரியர்கள்
மாணவர்களுக்கு
ரோல் மாடலாக
இருக்க வேண்டும்
- அப்துல் கலாம் வலியுறுத்தல்
ஆசிரியர்கள்
தங்கள் பணியை
நேசிக்க வேண்டும்.
அவர்கள் மாணவர்களுக்கு
முன்மாதிரியாக இருக்க வேண்டும் என முன்னாள்
இந்திய குடியரசுத் தலைவர் அப்துல்
கலாம் வலியுறுத்தினார்.
இதுகுறித்து,
பாடசாலை விழா ஒன்றில் கலந்து கொண்ட அப்துல்
கலாம் பேசியதாவது:-
''வாழ்க்கை
என்ற கடலில்
வழிதெரியாமல் நிற்கும் மாணவர்களை நெறிப்படுத்தி அவர்களுக்கு
தகுந்த பாதையை
காட்டும் கலங்கரை
விளக்கமாக ஆசிரியர்கள்
விளங்க வேண்டும்.
மாணவர்களை நாட்டுக்காக
சேவை செய்ய
ஊக்கப்படுத்த ஆசிரியர்களின் வாழ்க்கையையே
ஒரு வாழும்
உதாரணமாக எடுத்துக்
கொள்ளலாம். ஒரு மாணவனை அனைத்து துறைகளிலும்
வெற்றி பெற
செய்யவேண்டும் என்றால் அதற்கு ஆசிரியர்கள் ரோல்
மாடலாக இருக்க
வேண்டும்.'' என்றார்.
இதற்காக,
11 விதிகள் கொண்ட உறுதிமொழியையும் ஆசிரியர்களுக்கு கலாம்
அறிமுகப்படுத்தினார். குறிப்பாக, பணியை
நேசித்தல், இளைய சமுதாயத்திற்கு ஊக்கம் அளித்தல்
போன்றவை அதில்
அடங்கும்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.