இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் சந்திப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் இரா.சம்பந்தன், மாவை எஸ்.சேனாதிராஜா, சுரேஷ் பிரேம சந்திரன், எம்..சுமந்திரன், பொன்.செல்வராஜ் மற்றும் செல்வம் அடைக்கல நாதன் ஆகியோர் நேற்று காலை டில்லியில் இந்திய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து பேசினர்.
அப்போது இலங்கை தமிழர்களுக்கு உரிய அதிகார பகிர்வு கிடைப்பது குறித்தும், 13-வது அரசியல் அமைப்பு சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.மேலும், இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தை சேர்ந்த மக்களின் பிரச்சினைகள் குறித்தும், இது தொடர்பாக நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

 இந்த நிலையில், டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் இன்று சந்தித்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி  இரா. சம்பந்தன் தலைமையில் எம்.பிக்கள் பிரதமரை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது இலங்கையில் 13 வது அரசியல் சட்ட திருத்தம் அமல்படுத்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top