மத்தியஸ்தம்
செய்யுமாறு இராணுவத்திடம்
நான் கேட்டுக் கொள்ளவில்லை
- நவாஸ் ஷெரிப்
மத்தியஸ்தம்
செய்ய நான்
இராணுவத்திடம் கேட்டுக் கொள்ளவில்லை என்று பாகிஸ்தான்
பிரதமர் நவாஸ்
ஷெரிப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில்
பெருமளவு மோசடி
நடந்துள்ளதாக கூறி, பிரதமர் நவாஸ் ஷெரீப்
பதவி விலகக்கோரி,
முக்கிய எதிர்க்கட்சிகளான
இம்ரான் கானின்
தெஹ்ரீக் இ
இன்சாப் கட்சியும்,
மத குரு
தார் உல்
காதிரியின் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் கட்சியும்
போர்க்கொடி உயர்த்தி 2 வாரங்களாக போராட்டம் நடத்தி
வருகின்றன. இது அரசின் நிலைத்தன்மைக்கு கேள்விக்குறியை
ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இப்பிரச்சனைகளுக்கு அந்நாட்டு இராணுவம் மத்தியஸ்தம் செய்ய
முன்வந்தது. இம்ரான் கான் மற்றும் மத
குரு தார்
உல் காதிரியுடன்
அந்நாட்டு இராணுவ
தளபதி ரஹீல்
ஷெரீப் பேச்சுவார்த்தை
நடத்தினார்.
தன்னுடைய
நிலைப்பாட்டில் இருந்து இம்ரான்கான் பின்வாங்க மறுத்துவிட்டார்.
பேச்சுவார்த்தையை அடுத்து பேசிய இம்ரான்கான்,
பேச்சுவார்த்தை நடத்த அரசு
எப்போது இராணுவத்தை
கேட்டுக் கொண்டதோ,
அப்போதே அரசு
அரசியல் தீர்வு
காணுவது குறித்து
நினைக்கவில்லை என்பதை தெளிவு படுத்தியுள்ளது. என்று
கூறினார். எதிர்க்கட்சிகள்
எந்த பிரச்சனையை
முன்வைத்து போராடி வருகின்றனரோ அது குறித்து
நீதி விசாரணை
மேற்கொள்ள இராணுவம்
சம்மதம் தெரிவித்தது.
இராணுவம் தலையிட்ட
பின்னர் பிரச்சனை
விரைவில் தீர்க்கப்படலாம்.
என்று தகவல்கள்
வெளியாகின.
இந்நிலையில்
மத்தியஸ்தம் செய்ய நான் இராணுவத்திடம் கேட்டுக்
கொள்ளவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்
ஷெரிப் தெரிவித்துள்ளார்.
மத்தியஸ்தம் செய்ய நாங்கள் இராணுவத்திடம் கேட்கவில்லை.
பாதுகாப்பு அளிப்பது அவர்களது பொறுப்பு ஏனெனில்
அவர்கள் அதனை
செய்தார்கள். என்று நவாஸ் ஷெரிப் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.