மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம்
இருநாடுகளும் பேசி தீர்த்துக்கொள்ள்
வேண்டும்
இந்திய உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
இலங்கை
கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து போதிய
பாதுகாப்பு வழங்க கோரி அதிமுகவின் தம்பித்துரை,
திமுகவின் ஏ.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர்
இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனை விசாரித்த உச்ச
நீதிமன்ற நீதிபதிகள்,
ராஜதந்திரம், அரசியல் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட
முடியாது என்று
தெரிவித்தனர். இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம்
பிரச்சனையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தியதுடன்
வழக்கை முடித்துவைப்பதாக
அறிவித்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.