தலைகீழாக கவிழ்ந்த பஸ்
விபத்தில் 11 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நிகழ்ந்த பஸ் விபத்தில் 11 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் ஜகார்தாவில் இருந்து தெற்கே 90 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது சியான்ஜூர் மாவட்டம். இப்பகுதியில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த நான்கு கார்கள் மீது வரிசையாக பயங்கரமாக மோதியது.
அத்துடன் சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள்கள் மீதும் மோதியது. கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை இடித்துத் தள்ளிய பஸ், இறுதியில் ஒரு பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 50 பேர் காயம் அடைந்துள்ளனர்.
பஸ் கட்டுப்பாட்டை இழப்பதற்கு பிரேக் பிடிக்காதது காரணமாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் முதற்கட்ட விசாரணையின் முடிவில் மட்டுமே விபத்திற்கான காரணம் தெரிய வரும் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.