சர்வதேச வர்த்தகத்தில்
இலங்கை மேலும் வலுவடைய வேண்டும்
- அமைச்சர் றிசாட் பதியுதீன்
சர்வதேச வர்த்தகத்தில் இலங்கை வலுவடைவதற்கான பல துறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச வர்த்தகத்தில் இலங்கை மேலும் வலுவடைய வேண்டும். இதற்காக நாட்டின் ஏற்றுமதியாளர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான சிறப்பான பொறிமுறையொன்றின் அவசியத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச வர்த்தகத்திற்கு அமைய இலங்கை ஏற்படுத்திக் கொண்ட பல்லின உடன்படிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டது.
வெற்றிகரமான சர்வதேச நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த அறிவு முக்கியமானதாகும். ஏனைய நாடுகளுடன் போட்டி மிகுந்த வர்த்தகத்தை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் குறித்தும் அமைச்சர் இங்கு விடயங்களை தெளிவுபடுத்தினார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.