மிதக்கும் சயுர கப்பலின் சிற்றுண்டிச்சாலை
சேவை ஆரம்பம்
மிதக்கும் சயுர கப்பல் சிற்றுண்டிச்சாலை சேவைகள் ஆரம்பமாகியுள்ளன.
பொதுமக்களுக்கு பொழுது போக்கிற்கான வசதிகளும் செய்யப்பட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு தெரிவித்துள்ளது.
கடல் பயணம், பிறந்த நாள் நிகழ்வு, திருமண நிகழ்வு, ஆகியவற்றுக்காகவும் இதில் இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் இது தொடர்பான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
மலிவான விலையில் பொதுமக்களுக்காக இதில் பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். தேவையான உணவு வகைகளை தயாரித்துக் கொள்வதற்காக தனியான பணியாளர்களின் சேவையைப் பெற்றுக் கொள்ள இதில் வசதிகளும் உண்டு.
இது மிதக்கும் கப்பலாக பெயரிடப்பட்டு இதன் வெள்ளோட்டம் நேற்று மாலை இடம்பெற்றது. திக்ஓவிட்ட துறைமுகத்தில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. 30 பேரைக் கொண்ட குழு ஆரம்ப நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.