மாயக்கல்லி மலையில் பெளத்த மடாலயம்
அமைப்பதற்கான முஸ்தீபு
அமைச்சர் ரவூப் ஹக்கீம் களத்துக்கு நேரடி விஜயம்
இறக்காமம்,
மாணிக்கமடு பிரதேசத்தின் மாயக்கல்லி மலையில் பெளத்த
மடாலயம் அமைப்பதற்கான
முஸ்தீபு மற்றும்
அத்துமீறிய காணி அபகரிப்பு போன்றவற்றை தடுக்கம்
வகையிலான முன்னெடுப்புகளை
மேற்கொள்ளும் நோக்கில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தலைவரும் அமைச்சருமான
ரவூப் ஹக்கீம்
இன்று 30 ஆம் திகதி விசேட உலங்கு
வானூர்தி மூலம்
களத்துக்கு நேரடி விஜயம் மேற்கொண்டார்.
இறக்காமம்,
மாணிக்கமடு பிரதேசத்தின் பள்ளிவாசல் நிர்வாகிகள்,
மக்கள் பிரதிநிதிகள்,
பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இறக்காமம்
பள்ளிவாசலில் வைத்து, அமைச்சர் ரவூப் ஹக்கீம்
அவர்களுடன் மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில்
கலந்துரையாடினர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.