அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஏற்பாட்டில்
கல்முனை தமிழர் பிரதேச மயான சுற்றுமதில்
அமைப்பு வேலைகள் ஆரம்பம்
கல்முனை
தமிழர் பிரதேச
பொதுமயான சுற்றுமதில்
அமைப்பு வேலைகள்
துரிதமாக தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
தமிழர்
பிரதிநிதிகள்
அண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களைச் சந்தித்து அபிவிருத்தி தொடர்பான பல
கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர்.
இந்த
சந்திப்பின் போது கிழக்கு மாகாண முதலமைச்சர்
ஹாபிஸ் நசீர்
அஹமட் மற்றும்
பிரதி அமைச்சர்
எச்.எம்.எம்.ஹரீஸ்
ஆகியோர் கலந்து
கொண்டிருந்தனர்.
இதன்
போது மயான
சுற்றுமதில் அமைப்பதற்கான ஏற்பாடுகளை முதலில் செய்யுமாறு
அமைச்சர் ரவூப்
ஹக்கீம் முதலமைச்சரிடம்
தெரிவித்திருந்தார்.
சுற்றுமதில் வேலைகளை விரைவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பிரதி அமைச்சர் ஹரீஸ் ஆகியோர்களுக்கு தமிழர் பிரதிநிதிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.