பெற்றோலிய தொழிற்சங்கம் பணிப் பகிஷ்கரிப்பு
பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைகளின் காரணமாக எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது .
என்றாலும் இதுவரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை முதல் அனைத்து எரிபொருள் விற்பனை நிலையங்களில் பாரிய வாகன தொடரணிகள் காணப்படுவது அவதானிக்க முடிந்தது.
ஹம்பாந்தோட்டை எரிபொருள் தாங்கித் தொகுதி மற்றும் சீனக்குடா எரிபொருள் தொகுதி ஆகியன இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட வேண்டும்.
அவற்றுடன், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயப்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் இந்தப் பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளது.
இன்று பிற்பகல் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தமது பிரச்சினைகளுக்கு சரியானதொரு தீர்வு கிடைக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.