மண் சரிவில் சிக்கி

9 குழந்தைகள் உட்பட 24 பேர் பலி

கிர்கிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிர்கிஸ்தானின் தெற்கு பகுதியிலுள்ள உஸ்ஜென் மாவட்டத்தின் ஓஷ் பகுதியில், கனமழை பெய்து வருவதால் குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக பாரிய நிலச்சரிவொன்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
குறித்த நிலச்சரிவின் காரணமாக 9 குழந்தைகள் உட்பட 24 பேர் மண்ணினுள் புதையுண்டு உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 20 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காணமல் போனவர்களை தேடும்பணியில் அந்நாட்டு பாதுகாப்பு மற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும், ஒரு மாதத்திற்கு முன்பாக குறித்த பகுதியிற்கு நிலச்சரிவு அபாயம் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top