ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை
பெற்றெடுத்த பொத்துவில் தாய்!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தாயொருவர் பெற்றெடுத்துள்ளார்.
பொத்துவிலைச் சேர்ந்த தாயொருவரே நேற்று அதிகாலை 4.00 மணியளவில் சத்திர சிகிச்சை மூலம் குறித்த நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
பொத்துவில் இன்ஸ்பெக்டர் ஏற்றம் வீதியை சேர்ந்த ஐ.விஜிதகுமாரி என்னும் 35 வயதுடைய பெண்ணே இந்த நான்கு குழந்தைகளை பிரவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் குழந்தைகளில் 3 பெண் குழந்தைகளும் 1 ஆண் குழந்தையும் அடங்கியுள்ளன.
ஏற்கனவே இத் தாய்க்கு இரு ஆண் பிள்ளைகள் இருப்பதாகவும் தற்போது நான்கு குழந்தைகள்
பிரசவித்துள்ளதால் தனக்கு பாரிய பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளதாக குழந்தைகளின் தந்தை
தெரிவித்துள்ளார்.
இருப்பதற்குக்கூட சரியான வசதிகள் இல்லாததால் தங்களுக்கு பண வசதியுள்ளவர்கள்
உதவி செய்யுமாறு பிள்ளைகளின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை குழந்தைகளின் நிறை குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக குழந்தை நல வைத்திய நிபுணர் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் மற்றும் சத்திர சிகிச்சை நிபுணர்களின் சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக குறித்த குழந்தைகள் பாதுகாப்பான முறையில் சத்திர சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.